ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!


 ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப் பெறும் நோக்கில் கலந்துரையாடலொன்று இன்று (26) ஹட்டன் தொழில் தினைக்களத்தில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பிரதித்தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் மாநில சிரேஷ்ட இயக்குனர்/உத்தியோகஸ்த்தர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்த சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், குறித்த தோட்டத் தொழிலாளர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய முறையில் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மொழி தொடர்பான தவறுதலால் இவ்வாறு நடந்ததாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளரிடம் தோட்ட முகாமையாளர் நேரடியாக மன்னிப்புக் கோரினார். மேலும், இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக உறுதியளித்தார்.இதனையடுத்து, ஜீவன் தொண்டமான் எம்.பியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட தோட்ட முகாமையாளர், மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், தொழிலாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இத்தகைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமென ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.மேலும், தோட்ட நிர்வாகம் தொடர்பாக தொழிலாளர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தோட்ட முகாமையாளரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையால், இந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் க்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.ஊடகப்பிரிவுஜீவன் தொண்டமான் பா.உ

Related Posts

📈 இலங்கை சாியான பாதையில் பயணிக்கின்றது –  IMF   – Global Tamil News

இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) புயல்…

Read more

தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக   GMOA எச்சாிக்கை – Global Tamil News

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  ஆக்கபூர்வமான  முறையான தீர்வை வழங்கத் தவறினால்   எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…

Read more

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! – Global Tamil News

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை…

Read more

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு…

Read more

இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஐரோப்பா இனி மிக அருகில்! ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்! – Global Tamil News

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர…

Read more

பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு…

Read more