ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


 நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள் மட்டுமன்றி ரயில் ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் நிலைய அதிபர்களைச் சேர்ப்பது மற்றும் பதவி உயர்வு தொடர்பில் அவசியமான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. இது ரயில் நிலைய அதிபர்களின் கடமை வினைத்திறனிலும், ஊழியர்களின் மனநிலையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனர்த்தக் கடன்  தொகையானது ரூ. 400,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், ரயில்வே திணைக்களத்தினால் அந்தத் தொகையை ரூ. 250,000/- வரை குறைத்து வழங்கத் தீர்மானித்திருப்பது பாரிய பிரச்சினை என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் செயற்பாடானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானத்தை நேரடியாக அவமதிப்பதாக அமைவதோடு, ரயில் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்பதால், அது தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவையை முறையாகத் திட்டமிடாமை, கால அட்டவணைகள் சீர்குலைவு மற்றும் செயற்பாட்டு பலவீனங்கள் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், இந்த நிலைக்குத் திணைக்கள நிர்வாகமே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts

📉 அமேசான்  16,000 பணியாளர்களை  பணிநீக்க  முடிவு  – Global Tamil News

அமேசான் (Amazon) நிறுவனம் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 16,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு…

Read more
விடுதலையில்லை!

விடுதலையில்லை!

திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் மூன்று பேர் உட்பட 10 பேரின்…

Read more
அடுத்து-கோத்தாவும்-எடுபிடிகளும்-உள்ளே?

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே?

2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலைத்…

Read more
ரணில்-மீண்டும்-உள்ளே?

ரணில் மீண்டும் உள்ளே?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க…

Read more

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்!

 முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்…

Read more
2

2

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே”…

Read more