மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!

by ilankai

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (26) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இதனிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது.அநுர அரசு ஆட்சிப்பீடமேறிய பின்னராக இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts