Archive - January 26, 2026

1
சீவீகே வெளியே ; மறவன்புலோ !
2
விமானம் கவனம்!
3
கிவுள் ஓயாத்திட்டம்:வலுக்கும் எதிர்ப்பு!
4
மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!
5
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!
6
கிறீஸ் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: நால்வர் பலி!
7
பிலிப்பீன்ஸ் படகு மூழ்கியது: பல 18 பேர் பலி! 28 பேரைக் காணவில்லை: 316 உயிருடன் பேர் மீட்பு!
8
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
9
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
10
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

சீவீகே வெளியே ; மறவன்புலோ !


தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குக என அழைப்பு விடுத்துள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.1961 பங்குனி  யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன்.1961 சித்திரை  யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு.தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன.65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர். கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன்.தந்தை செல்வா என்னை அரவணைத்தவர்.  அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன். அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை.மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை.மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லைகனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை.மதமாற்றச் சபைகள் வழி என்னைத்  தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை.சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை.பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை.கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை.ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை.முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை.தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை.சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை.உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை.சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை.சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை.மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும். அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன்.முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன்.கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன்.கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன்.தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான்.தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன் என மறவன்புலோ சச்சிதானந்தன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அழைப்புவிடுத்துள்ளார்.

விமானம் கவனம்!


கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,  அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவுறுத்தல்கள் மற்றும் சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அப்பகுதிகளில்; ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பறப்புக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிவுள் ஓயாத்திட்டம்:வலுக்கும் எதிர்ப்பு!


வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமது நிலைப்பாட்டை அரசிற்கு முன்வைக்கவேண்டுமென வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.கிவுள் ஓயாத்திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்ப்படுத்தக்கூடிய திட்டமாக நாங்கள் சந்தேகப்படுகின்றோம்.கிவுள் ஓயாத்திட்டத்திட்டம் தொடர்பாக எமக்கு இருக்கும் சந்தேககங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை .எனவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம். தொடர்பாக அனைத்து தமிழ்கட்சிகளோடும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். அனைத்து கட்சிகளும் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்தவரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பரந்த மனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள். அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோமெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!


இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (26) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இதனிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது.அநுர அரசு ஆட்சிப்பீடமேறிய பின்னராக இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!


நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்னதாக, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களுக்கு விரைவான தடையை மக்ரோன் முன்வைக்கிறார்.தேசிய சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் குறித்த விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இளம் டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதில் ஆஸ்திரேலியாவைப் பின்பற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.இந்த சட்டம் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற நெட்வொர்க்குகளை அணுகுவதைத் தடுக்கும்.செப்டம்பர் மாதம் கல்வியாண்டு தொடங்கும் போது தடையை அமல்படுத்த விரும்புவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.சமூக ஊடகங்களின் ஈர்ப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தனது முயற்சியை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரட்டிப்பாக்கியுள்ளார், இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முக்கிய தளங்களில் இருந்து தடை செய்யும் விரைவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, விரைவான நாடாளுமன்ற நடைமுறையைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.இந்த சட்டம் திங்கள்கிழமை பிற்பகல் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் ஆராயப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து செனட் விரைவில் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குழந்தைகளின் மன ஆரோக்கியம், திரை நேரம் மற்றும் தொழில்நுட்ப தளங்களின் சக்தி பற்றிய வளர்ந்து வரும் சர்வதேச விவாதத்தின் மையத்தில் மக்ரோனை உறுதியாக நிலைநிறுத்துகிறது.பிரிட்டிஷ் அரசாங்கம் இளம் டீனேஜர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்தன. ஐரோப்பா கடுமையான வயது விதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என்ற கருத்துக்கு இது உத்வேகம் அளித்தது.பிரான்சில், இந்தக் கவலை தெளிவான புள்ளிவிவரங்களால் ஆதரிக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பான ஆன்செஸின் கூற்றுப்படி, இரண்டு டீனேஜர்களில் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்.12 முதல் 17 வயதுடையவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இணையத்தை அணுக தினமும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் பத்தில் ஆறு பேர் முதன்மையாக சமூக வலைப்பின்னல்களுக்கு அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை , சுயமரியாதை குறைதல், தூக்கக் கலக்கம் மற்றும் சுய-தீங்கு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தற்கொலை தொடர்பான பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கத்திற்கு அதிக வெளிப்பாடு குறித்து எச்சரித்தது.டீனேஜ் தற்கொலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பங்களிப்பதாகக் கூறி, பல குடும்பங்கள் டிக்டோக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளன.

கிறீஸ் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: நால்வர் பலி!


மத்திய கிறீசில் உள்ள ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது நாட்டின் மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாகும்.ஆறு ஊழியர்களும் ஒரு தீயணைப்பு வீரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உயிருக்க ஆபத்து இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தலைநகர் ஏதென்ஸிலிருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகலா நகருக்கு வெளியே உள்ள வயலண்டா தொழிற்சாலையின் எரிந்த எச்சங்களை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.இரவுப் பணியின் போது உணவு உற்பத்தி ஆலையின் ஒரு பிரிவில் அதிகாலை 4 மணிக்கு சற்று முன்பு தீ விபத்து ஏற்பட்டது, அதே நேரத்தில் 13 பேர் உள்ளே இருந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.தீ விபத்துக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், தொழிற்சாலை கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததாகவும் தீயணைப்புப் படையினரின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் படகு மூழ்கியது: பல 18 பேர் பலி! 28 பேரைக் காணவில்லை: 316 உயிருடன் பேர் மீட்பு!


பிலிப்பைன்ஸில் 350 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 18 பேர் இறந்தனர் மற்றும் 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:50 மணியளவில் பயணிகள் படகு, சாம்போங்காவிலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோவுக்குப் புறப்பட்டபோது கவிழ்ந்தது.பசிலன் மாகாணத்தில் உள்ள பலுக்-பலுக் தீவு கிராமத்திலிருந்து ஒரு கடல் மைல் (கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர்) தொலைவில், எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் ⁠3 என்ற படகு மூழ்கியதாக கடலோர காவல்படை தளபதி ரோமல் துவா செய்தி நிறுவனமான தி அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) யிடம் தெரிவித்தார்.பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் கூற்றுப்படி, படகு 27 பணியாளர்கள் உட்பட 352 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டது.படகில் ஒரு கடலோர காவல்படை பாதுகாப்பு அதிகாரி இருந்தார். மீட்புக் கப்பல்களை அனுப்புமாறு முதலில் எங்களை அழைத்து எச்சரித்தவர் அவர்தான் என்று துவா கூறினார். அந்த பாதுகாப்பு அதிகாரி உயிர் பிழைத்ததாகவும் கூறினார்.இதுவரை, மீட்புக் குழு குறைந்தது 316 பேரைக் காப்பாற்றியுள்ளது. மேலும் இன்னும் காணாமல் போன 28 பேரைத் தேடி வருவதாக கடலோர காவல்படை தளபதி ரோமல் துவா செய்தி நிறுவனமான ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (AFP) இடம் தெரிவித்தார். 

யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,  அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.’நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்:மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை.கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார்.வடக்கு மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்றைய தினம், யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி செத்திய குணசேகர மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் ஆகியோர், ‘ஊழலற்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல்’, ‘ஊழலை எதிர்ப்பதில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பங்கு’ மற்றும் ‘சட்டப் பின்னணி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றினர். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் – வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகள் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை செவ்வாய்கிழமை நடைபெறும்.வவுனியா மாநகர சபை மண்டபத்தில் – வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.