தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினை தொடர்ந்து அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் விலக வேண்டும் என மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.சிறுபான்மை கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார். அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது ஆதரவு வழங்குகிறார். அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது சிறீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக் கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார்.கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து எஸ்.சிறீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.எனினும் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சேறுபூசல்களின்றி பொது வெளியில் மின் உற்பத்தி நிலைய காணி ஒதுக்கீடு தொடர்பில் உரையாட சிறீதரன் மற்றும் அவரது மகன் சாரங்கன் உள்ளிட்டவர்கள் சவால் விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஏம்.ஏ.சுமந்திரனுடன் கூட்டு:பொதுஜனபெரமுன!
2