திருகோணமலையில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பான சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பிக்குகளின் விளக்கமறியல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த விளக்கமறியல் உத்தரவின் எழுத்துமூல பிரதி (Certified Copy) மற்றும் அன்றைய தினத்தின் குரல் பதிவு (Voice Record) ஆகியவற்றை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களை விளக்கமறியலில் வைப்பதற்கு எதிராக கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரு பிக்குகளும் தாக்கல் செய்த ரீட் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் சர்ச்சைக்குரிய முறையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா் இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதுவரை பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரு பிக்குகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவு அமுலில் இருக்கும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா (Maintainability) என்பது குறித்த தீர்மானத்தை அன்றைய தினம் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது. திருகோணமலை போன்ற பல்லின மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீதிமன்றம் இந்த வழக்கை மிகவும் அவதானமாக கையாண்டு வருகின்றது. Tag Words: #KassapaThero #Trincomalee #CourtOfAppeal #LegalUpdate #LKA #BreakingNews2026 #BuddhistMonk #JudicialOrder
⚖️ திருகோணமலை புத்தர் சிலை வழக்கு – தொடா்ந்தும் பிக்குகள் விளக்கமறியலில் – Global Tamil News
5