சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக பெய்த கடும் மழையினால், கண்டி – கலஹா, கல்லந்தென்னா பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தெல்தோட்டை கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவில் அருகே ஒரு பிரம்மாண்டமான பாறை சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை ஆய்வு செய்த போது, அது மிகவும் அரிதான “நீல நிறத்தில்” காணப்பட்டது. இது ஒரு விலையுயர்ந்த நீல மாணிக்கக் கல்லாக (Blue Sapphire) இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, குறித்த பாறையைப் பார்ப்பதற்காகப் பெருமளவிலான மக்கள் அந்த இடத்தில் கூடி வருகின்றனர். இந்த மர்மப் பாறைக்கு ஏதேனும் சேதம் விளைவிக்கப்படலாம் அல்லது திருடப்படலாம் என்ற அச்சத்தில், கலஹா காவல்துறையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு 24 மணிநேரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாறை உண்மையான ரத்தினக் கல்லா என்பதை உறுதிப்படுத்த, தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு (National Gem & Jewellery Authority) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் வந்து ஆய்வு செய்யவுள்ளனர். இலங்கையில் இதற்கு முன்னரும் ரத்தினபுாி பகுதியில் இது போன்ற பாரிய மாணிக்கக் கல் கொத்துகள் நிலத்திற்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாறையின் தரம் மற்றும் எடை (Carat) ஆகியவற்றைப் பொறுத்தே அதன் சர்வதேச சந்தை மதிப்பு தீர்மானிக்கப்படும். Tag Words: #KandyNews #Gallahetenna #BlueSapphire #SriLankaGems #CycloneDitwah #KalahaPolice #MysteryRock #MuthuMariAmmanTemple
💎 கலஹாவில் நிலச்சரிவில் சிக்கி வெளிவந்த நீல நிறப் பாறை – Global Tamil News
7