சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழப்பு – மகன் படுகாயம்

by ilankai

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழப்பு – மகன் படுகாயம் வெலிகம, கம்மல்கொட பகுதியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்றைய தினம் புதன்கிழமை  இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts