காங்கேசன்துறை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

by ilankai

காங்கேசன்துறை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு,  02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.அதன்போது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்,  இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்திடம் குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts