ஜப்பானின் மேற்குப் பகுதியான ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று (ஜனவரி 6, 2026, செவ்வாய்க்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய நேரப்படி இன்று காலை 10:18 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது (பின்னர் சில ஊடகங்கள் இது 6.4 வரை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன). ஷிமானே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ‘Shindo’ அளவீட்டில் இது ‘Upper 5’ ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், மக்கள் பிடிமானமின்றி நிற்பது கடினம் மற்றும் கனமான தளபாடங்கள் நகரக்கூடும் என்பதாகும். முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காலை 10:37 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான அதிர்வு உட்பட பல தொடர் நிலநடுக்கங்கள் (Aftershocks) ஏற்பட்டுள்ளன.நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் ஷிமானே அணுமின் நிலையம் (Shimane Nuclear Power Station) அமைந்துள்ளது. ஜப்பானிய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுசுகி எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (Chugoku Electric Power) அங்கு எந்தவிதமான அசாதாரண மாற்றங்களும் (Irregularities) ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 2024 டிசம்பரில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இதன் 2-வது அலகு (Unit No.2) தற்போதும் வழக்கம் போல் இயங்கி வருகின்றது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஷின்-ஒசாகா மற்றும் ஹகடா இடையேயான புல்லட் புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னா் மதியம் 1:00 மணியளவில் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில கட்டிடங்களுக்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Tag Words: #JapanEarthquake #Shimane #ShimaneNuclearPlant #Shinkansen #BreakingNewsWorld #Japan2026 #EarthquakeAlert #TsunamiFree #TamilNewsWorld
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Global Tamil News
8