வெனிசுலாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இன்று (04.01.25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 🔹 அமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: இறையாண்மை பாதுகாப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, உலகின் அனைத்து நாடுகளினதும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். சர்வதேசக் கடமை: ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமானது. இலங்கையின் கோரிக்கை: இது தொடர்பில் நாளை (05) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஐநா பொதுச்சபை: ஐநா சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்கள் மீது பொதுச்சபையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும். 💬 அரசியல் நிலைப்பாடு குறித்த தெளிவுபடுத்தல்: மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அறிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பாகும். நாம் இங்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையே தெளிவுபடுத்துகிறோம்” எனத் தெரிவித்தார். #SriLanka #Venezuela #UnitedNations #ForeignPolicy #VijithaHerath #InternationalLaw #Sovereignty #BreakingNews #LKA #Diplomacy #GlobalNews #UNSC
📢 வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவையும், டிரம்பையும் கடினமாக கடிந்தது இலங்கை அரசாங்கம்! – Global Tamil News
16
previous post