ஜேவிபி கைவிட்ட லலித்:கோத்தாவிற்கு பிரச்சினை!

by ilankai

ஜேவிபியினால் கைவிடப்பட்ட அதன் முன்னாள் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளது.இந்நிலையில் அவர்களை காணாமல் ஆக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார்.மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முன்னணி சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.இருவரும் ஜேவிபியிலிருந்து விலகி முன்னணி சோசலிசக் கட்சியில் இணைந்த நிலையில் 2011 டிசம்பர் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னணி சோசலிசக் கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்திருந்தார்.

Related Posts