யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில்! – Global Tamil News

by ilankai

யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில் யாழ்ப்பாணத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. வட்டுக்கோட்டை முதலி கோவலடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனின் உடைமையில் இருந்து வாளினையும் மீட்டு இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்திய போது , இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது Spread the love  வட்டுக்கோட்டைவட்டுக்கோட்டை  காவற்துறையினர்

Related Posts