முல்லைத்தீவு மழை: 64,098 பேர் பாதிப்பு

by ilankai

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,312 குடும்பங்களை சேர்ந்த 4,124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,658 குடும்பங்களை சேர்ந்த 14,650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5,443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,476 குடும்பங்களை சேர்ந்த 15,395 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2,418 குடும்பங்களை சேர்ந்த 5,868 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2,556 குடும்பங்களை சேர்ந்த 6,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3,872 குடும்பங்களை சேர்ந்த 11,184 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1,186 குடும்பங்களை சேர்ந்த 3,537 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts