மூன்று நாள் காய்ச்சலில் சிறுவன் உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.  யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரதீபன் லக்சுதன்  (வயது 17) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளாா். மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Spread the love  அல்வாய்காய்ச்சல்சிறுவன் உயிரிழப்புயாழ். போதனா

Related Posts