மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் இரண்டு ஆண்டுகளிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்கள் வெட்டிக் கொல்ல வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்த சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பில் அவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கைதிற்கான உத்தரவு பிறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇதனிடையே நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு அம்பிட்டிய சுமனரத்த தேரர் பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பிபிட்டிய தேரர் உள்ளே!
4