பாடசாலையில் பாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் – குற்றவாளிக்கு...

பாடசாலையில் பாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் – குற்றவாளிக்கு 40 வருட சிறை

by ilankai

தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தலின் போது , சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார். அது தொடர்பில் ஆசிரியரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில்  , மாமனாரை கைது செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் , அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார். குறித்த வழக்கினை அரச சட்டத்தரணி M.A.M லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்

Related Posts