தேசிய மக்கள் சக்தி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியுள்ளன.அவ்வகையில் களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டுள்ளது.சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் வரவு -செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பிற்கு கோரிய போது ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.தேசிய மக்கள் சக்தி கட்சியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர்.அதேபோன்றே தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.வாக்கெடுப்பில் ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர்.சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது.இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
தள்ளாட தொடங்கியது தேசிய மக்கள் சக்தி!
5
previous post