கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை – Global Tamil News

by ilankai

யாழ்  – நெல்லியடி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளாா். நேற்று (18)  செவ்வாய்க்கிழமை அதிகாலை கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து  வீட்டிலிருந்து சென்ற  இளைஞன் பின்னா்   வீட்டுக்கு அ ருகிலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு    பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா். உயிாிழந்தவா் நெல்லியடி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞா் ஆவாா். சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் Spread the love  இளைஞன் கொலைகூரிய ஆயுதம்நெல்லியடி

Related Posts