திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், நீதிமன்ற படியேறியுள்ளார்.திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க கடலோரப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.தேவாலயத்தை நிர்மாணிக்க திருகோணமலை நகர சபை, அனுமதி அளித்திருந்தாலும், கடலோரப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், விஹாரையில் இரண்டு தேவாலயங்களைக் கட்டுவது அங்கீகரிக்கப்படாதது என்று தெரிவித்துள்ளார்.அவற்றை அகற்ற வேண்டும் என்றும் ஜூன் 28 ஆம் திகதி, ஒரு கடிதத்தில் தங்களுக்குத் தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது என்றும் அந்த ரிட் மனுவில் தேரர் குறிப்பிட்டுள்ளார்.திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்த இந்த மனுவில், கடலோரப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
தேவாலயங்களை காப்பாற்ற கோரும் பிக்கு!
1
previous post