யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்களுக்கு தலா 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 10 ஆதன உரிமையாளர்களிற்கு எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, அனைத்து ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த மன்று ஆதன உரிமையாளர்களிற்கு தலா 08 ஆயிரம் ரூபாய் வீதம் 80,000 தண்டப்பணம் விதித்தது. இதேவேளை உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும் , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால் , மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது. இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை , உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது.
டெங்கு பரவும் சூழலை பேணியவர்கள் – வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கு- தண்டம் – Global Tamil News
4