தூக்கத்தில் இருந்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு! – Global Tamil...

தூக்கத்தில் இருந்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு! – Global Tamil News

by ilankai

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்டு யுவதியொருவர்  உயிரிழந்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தூங்க சென்ற யுவதி , நேற்றைய தினம் அதிகாலை வேளை , தூக்கத்தில் இருந்து எழுந்து , மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அதனை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு வீட்டார் அறிவித்த வேளை , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை அடுத்து பிறிதொரு வாகனத்தில் யுவதியின் சடலத்தை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில்  ,உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts