யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் , போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தினை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுத்திருப்பது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் , நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்நிலையில் கடந்த வாரம் , திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைப் பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சந்தைக்கு வருவோரை துன்புறுத்தியுள்ளனர் போதைப்பொருள் மாபியாக்கள் போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிப்பதற்கான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்ற காசை வட்டிக்கு வழங்கும் மாபியாக்கள் – Global Tamil News
5