5
இந்தோனேஷியாவில் பாடசாலை வளாகம் ஒன்றில் அமைத்திருந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனா். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆரம்பக்கட்ட விசாரணையில், வெடிப்பு நடந்த இடத்தில் உடல் கவசம், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் இது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். Spread the love இந்தோனேஷியாதொழுகைபயங்கரவாத நடவடிக்கைமசூதி குண்டு வெடிப்பு