2
கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது அரசாங்கம் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தவேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் வரவேற்கின்றோம்.இருப்பினும் அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. இந்த வருடத்தில் இதுவரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.