யாழில். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு

யாழில். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு

by ilankai

யாழில். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts