2
நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. பரைய நாளன் குளம் காவல்துறைப்பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.