யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் தமிழ் மக்களிற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனிடையே போதைப்பொருள் ஒழிப்புக்காக ரேடார் அமைக்கவே காணி கோரப்படுவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர், காணி உரிமையாளர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். காணி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என கோரியிருந்தனர்.எனினும் தமிழரசுக்கட்சி சார்பு தவிசாளரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும், போதைப்பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. ரேடார் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை. மக்கள் காணி மக்களுக்கே என மறுதலித்திருந்தனர்.அத்துடன் தமிழ் மக்கள் காணிகளை இராணுவ நோக்கங்களிற்காக சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தனர்.இதனிடையே வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் அரசிற்கு கடிதம் அனுப்பவும் தீர்மானித்துள்ளது.
ரடார் காணி இராணுவ நோக்கத்திற்காகவே!
3