23
பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு , யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றனர். நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர்.