டக்ளஸிற்கு சலாம் போட்டவர்களால் பிரச்சினை?

by ilankai

 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்  டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட ஓருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த காலத்தில் குறித்த திண்மக் கழிவு தரம் பிரிக்கும் மையம்  தொடர்பான விவாதங்கள் நடைபெற்று பிரதேச செயலாளர் காலத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.அப்போதுவந்தபோது ஆதரவு வழங்கினவர்கள் தற்போது   தவிசாளராக மயூரன் வந்த நிலையில் எதிர்ப்பினை அரசியல் உள்நோக்கம் கொண்டு அப்பாவி பொதுமக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி தமது அரசியல் நலன்களுக்காக குறித்த விடயத்தை முன்னெடுத்து வருகின்றனர் .தற்போது அமைச்சரிடம் சந்திரசேகரனிடம் சென்று இருக்கின்றனர்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இல்லாத காலத்தில் நடந்து முடிந்த கட்டுமான பணிகளுக்கு பிறகு பதவியேற்ற தவிசாளர் மயூரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அரசியல் கட்சி பின்புலம் கொண்டோர் மயூரனின் கேள்விக்கு தடுமாறுகின்றனர் என குற்றசச்சாட்டுக்கள் முன்வைக்கபபட்டுள்ளது.

Related Posts