4
செம்மணி புதைகுழி அழக்வுக்கான பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக்கொள்ள தவணையிட்டுள்ளது.ஒக்டோபர் 1ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமானால் ஒக்டோபர் 21ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.