செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நான்கு என்புக்கூட்டு தொகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போதும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று தடவைகள் ஒன்றன் மேல் ஒன்றாக என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுசெம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 29 ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை 10ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 42 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 51 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 213 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணியில் ஒன்றன் மேல் ஒன்றாக என்புக்கூடுகள் – Global Tamil News
35
previous post