19
கொச்சிக்கடை காவல் நிலையத்தில் இன்று (29.08.25) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். Spread the love கைதுசட்டமா அதிபர் திணைகளம்நிமல் லான்சா