அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்! – Global Tamil News

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்! – Global Tamil News

by ilankai

நுகேகொடை நீதிமன்றத்தில் முன்னிலையான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேரர் இன்று (29.08.25) பிற்பகல் நீதிமன்றத்தில் முன்னலையானார். 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வண. வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம், ரதன தேரருக்கு ஆசனம் பெறுவதற்கு வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, 2025 ஓகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரதன தேரர் மீது பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts