பாதாள உலக குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவற்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. Spread the love இந்தோனேசியாகமாண்டோ சலிந்தகெஹல்பத்தர பத்மேகைதுஜகார்த்தாதெம்பிலி லஹிருபாணந்துறை நிலங்கபாதாள உலக குழுபெக்கோ சமன்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பிரபல பாதாள உலக குழும் தலைவர்கள் கைது! – Global Tamil News
36