தெல்லிப்பழையில் விபத்து – முதியவர் உயிரிழப்பு
யாழில். பட்டா ரக வாகனத்தை பின் நோக்கி செலுத்திய போது , வாகனத்தினுள் அகப்பட்டு , முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை தவளைக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த முதியவர் அடையாளம் காணப்படாத நிலையில் ,அவரை அடையாளம் காண உதவுமாறு தெல்லிப்பழை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பட்டா சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment