யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

உயிர்மாய்த்த பெண்ணின் நண்பி ஒருவர் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , தனது மகனின் திருமண செலவுக்கு என குடும்ப பெண்ணிடம் 25 பவுண் நகைகளை வாங்கி அடகு வைத்து பணத்தினை பெற்றுள்ளார். 

அந்நிலையில் , நீண்ட நாட்களாகியும் , அடகு வைத்த நகைகளை மீட்டு , கொடுக்காததால் , உயிர்மாய்த்த பெண் பல தடவைகள் தனது நண்பியிடம் , நகைகளை திருப்பி கேட்டு வந்துள்ளார். 

அவரும் நகையை மீட்டு கொடுக்காது தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த நிலையில் , கடும் விரக்தியில் இருந்த பெண் நேற்றைய தினம் சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணைகளில் உயிர்மாய்த்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.