யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் , தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும் , அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும் , ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் பணம் கொடுத்து ஏமார்ந்த நபர் கோப்பாய் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love

  பண மோசடி