Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் கோரிக்கை முன் வைக்த்ததை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று கட்டளையிட்டுள்ளது.
செம்மணியில் முன்னெடுக்கப்ட ஸ்கான் அறிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையிலையே கோரிக்கை. முன் வைக்கப்ட்டது
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , தற்போது பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் , அவற்றின் மூன்றாம் பகுதி பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , 20ஆம் திகதி மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் போது, செம்மணியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள காலத்திற்கு மேலதிகமாக மேலும் 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்று கட்டளையிட்டது.
அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.