யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

காங்கேசன்துறையை சேர்ந்த வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இருவரும் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து  சிறு படகில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் அவர்களது படகு திடீரென பழுதடைந்த நிலையில் , இந்திய கடல் எல்லைக்குள் தத்தளித்தவாறு காணப்பட்டுள்ளது.

அதனை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுத்துறை பகுதி கடற்தொழிலாளர்கள் கண்ணுற்று , படகையும் இரண்டு கடற்தொழிலாளர்களையும் மீட்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

அதனை அடுத்து அவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடலோர  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் ,  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.