இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் 5 ஆயிரம் தெருநாய்களை அகற்ற இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புது டில்லியின் நாய் கடி வழக்குகள் அதிகரித்து வருதைக் காரணம் காட்டி தெருக்களில் வாழ்ந்து வரும் தெருநாய்களை அகற்ற இந்தியாவின் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து 5,000 நாய்களைப் பிடித்து, அவற்றை கருத்தடை செய்து, தங்குமிடங்களுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

புது டில்லியின் தெருக்களில் சுற்றித் திரியும் பல நாய்கள் பாதிப்பில்லாதவை என்றாலும், நாய் கடித்த சம்பவங்களின் எண்ணிக்கையை மிகவும் கொடூரமானது என்று நீதிமன்றம் விவரித்தது.

குழந்தைகள், சிறு குழந்தைகள் எந்த வகையிலும் தெருநாய்களுக்கு இரையாகக்கூடாது என்று அது கூறியது.

நாய் கடித்தால் புகார் அளிக்க 24 மணி நேர உதவி எண்ணை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ரேபிஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் இடங்களை விளம்பரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

புது டில்லியில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2,000 நாய் கடி சம்பவங்கள் நடப்பதாக மருத்துவமனை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.

இந்தியாவின் தலைநகரின் தெருக்களில் எத்தனை நாய்கள் சுற்றித் திரிகின்றன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது.

2013 ஆம் ஆண்டின் மிகச் சமீபத்திய தரவுகளின்படி, தெருக்களில் குறைந்தது 60,000 நாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டக்கூடும் என்று கூறுகின்றன.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் வெறிநாய் கடி நோயை ஒழிப்பதில் வெற்றிவெற்றது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனிதர்களில் ரேபிஸை ஒழித்த முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது. இதுவரை எந்த நோயாளியும் இல்லை என்பது அறிக்கையிடப்பட்டுள்ளது.