யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பகுதியில் , வாளுடன் இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) காவற்துறை  விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

இரகசிய தகவலை அடுத்து , முதலி கோவிலடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து , விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இளைஞனிடமிருந்து வாள் ஒன்றினை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட வாளினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை காவற்துறையினரிடம்    விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்