யாழ்ப்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ,  அந்நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தாக்குதலாளி தப்பி சென்றுள்ளார் 

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்