இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

மன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடித்த 07 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகுடன் இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் நீரியல் வளத்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.