மீண்டும் கைது வேட்டை!

இலங்கை கடற்பரப்பினுள் உள்நழையும் இந்திய மீனவர்களிற்கு எதிரான கைது வேட்டை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (05) அன்று இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் , படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களையும் , கைது செய்த கடற்படையினர் , அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.