கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமைஇடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.