பிரதேச சபை உறுப்பினர் , அவரது மனைவி மற்றும் பிள்ளை சடலமாக மீட்பு

ஆதீரா Tuesday, July 29, 2025 இலங்கை

யடிநுவர பிரதேச சபை உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

பிரதேச சபை உறுப்பினரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் , அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அறை ஒன்றில் இருந்தும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment