தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.  இருநாடுகளின்  எல்லையில் மூன்று நாட்கள்  இடம்பெற்ற   இந்த மோதல்களில்   குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டடுள்ளதுடன்  1,68,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஸ்கொட்லாந்தில் உள்ள டிரம்ப், கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாயுடன் பேசியதாக டிரம்ப்  தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ச்சியான மோதல்கள் அமெரிக்காவுடனான எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கக்கூடும் என  எச்சரித்து, இரு தரப்பினரும் விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என  தான்  வலியுறுத்தியதாகவும் . இரு தரப்பினரும் தாமதமின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப்  தொிவித்துள்ளாா்.