யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15.07.25)  அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டார் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து , வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளனர். அதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.