பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை தமிழக அரசு அறிவித்துள்​ளது.மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது.

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2023-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர்.

தற்போது, இந்த திட்​டத்​தில் 3 முக்​கிய தளர்​வு​களை தமிழக அரசு அளித்து திட்​டத்​தின் பயனை விரிவுபடுத்​தி​யுள்​ளது. அதன்​படி, அரசுத்​துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்​று, தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் அல்​லாத பெண்​கள் திட்​டத்​தில் சேர விண்​ணப்​பிக்​கலாம்.

அரசு மூல​மாக மானி​யம் பெற்று 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களும் தகு​தி​யானவர்​கள். இந்​தி​ரா​காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​களும் விண்​ணப்​பிக்​கலாம்.

கணவ​ரால் கைவிடப்​பட்ட 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மணம் ஆகாத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் உள்ள மற்ற பெண்​கள் விண்​ணப்​பிக்​கத் தகுதி வாய்ந்​தவர்​கள் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.